மலரும் குளியாபிட்டியில் 23,593 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் நாளை திறப்பு

அச்சிடுக
குளியாபிட்டியில் 23,593 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நாளை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை கையளிக்கப்படுவதுடன் மேலும் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளளன.
 
இதன்படி இலங்கையின் முதலாவது தொழில்நுட்பவியல் தேசிய கல்வியற் கல்லூரி அடிக்கல் நடல் மற்றும் போதனா வைத்தியசாலையாக குளியாபிட்டிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அடிக்கல் நடப்படுவதுடன் குளியாபிட்டிய நகரின் சுரங்க பாதை, வடமேல் பல்கலைகழகத்தின் மருத்துவ பீடம் உட்பட பல அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் நாளை பிரதமரினால் திறந்து வைக்கப்படவுள்ளன.