கல்வியியற் கல்லூரிகளுக்கு போதனா கல்வி பாடநெறியை பயில்வதற்காக 8000 பேர் ஒரே நாளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

அச்சிடுக

கல்வியியற் கல்லூரிகளுக்கு போதனா கல்வி பாடநெறியை பயில்வதற்காக விண்ணப்பதாரிகளில் தகைமையுடைய 8000 பேர் எதிர்வரும் 25 திகதி இணைத்துக்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக 20 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்ணப்பாரிகளை அறிவுறுத்த கல்வி அமைச்சு நடடிவக்கை எடுத்துள்ளது.

நாடளாவிய 19 கல்வியியற் கல்லூரிகளுக்கு 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளின் உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக இரு மாணவ குழுக்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. இதன்பிரகாரம் 2018;2020 கல்வியாண்டுக்கு 2016 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரமும், 2019:2021 கல்வியாண்டுக்கு 2017 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் இணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.