பிந்திய செய்திகள்

கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளுக்கு புதிய தொழில்நுட்ப பிரயோகம் செய்வதற்காக 665 தேசிய பாடசாலைகளுக்கு 15,445 மடிக்கணிணிகள் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்..

 
அரச பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகளை பயிற்றுவிப்பதற்காக பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டது.
 
பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகளை கற்பதற்கான வாய்ப்பினை மேம்படுத்தும் நோக்கிலும் உலகத்துடன் இணைந்து முன்னேறுவதற்கு வெளிநாட்டு மொழிகளின் அவசியத்தை உணர்ந்து கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வெளிநாட்டு மொழிகளை பயிற்றுவிக்க பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவையில் யோசனை முன்வைத்தார். குறித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

 
 
சிங்கள இலக்கிய புத்தகங்கள் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கிய புத்தகங்கள் சிங்களத்திலும் மொழிப்பெயர்த்து வெளியிடுவதற்காக புதிய திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
 
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் கே. பத்மநாதன் அவர்கள் எழுதிய நூல் வெளியீட்டு விழா பம்பலப்பிட்டிய சரஸ்வதி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் அவர்கள் குருநாகல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது

பன்டுவஸ்நுவரயில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் அவர்கள் உரையாற்றிய போது..

இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியுமான குழுவினர் எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனே கைக்கோர்த்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
 
வடமேல் மாகாண இளைஞர்கள் மாநாடு குளியாபிட்டிய நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது . அங்கு கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
 
புதிதாக சிந்திக்கும் தலைமுறையை உருவாக்குவது எமது குழுவின் நோக்கமாகும். கல்வி துறையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக எமது அரசாங்கம் ஆரம்பித்துள்ள நடவடிக்கை ஒரு சிறந்த உதாரணமாகும். இதன்படி  உயர்தர மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்கும் திட்டத்தின் முதற்கட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும். முன்னேற்றம் காணும் உலகை எல்லை தாண்டி சென்று அறிவினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு எமது சிறார்களுக்கு வழங்கும் நோக்கில் டெப் கணிணி வழங்கப்படுகின்றது என்றார்.

Search