கல்வி அமைச்சர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் சாட்சியம்

அச்சிடுக
பாடப்புத்தகங்களில் கல்வி அமைச்சரின் வாழ்த்து செய்தி பிரசுரிக்கப்பட்டமை தொடர்பாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டது. இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணையில் கல்வி அமைச்சர் நேற்று (01) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.
இதன்போது முன்னைய காலம் முதல் பாடப்புத்தகங்களில் கல்வி அமைச்சரின் வாழ்த்து செய்தி பிரசுரிக்கப்படுகின்றது.இதுவரை கல்வி அமைச்சர்களாக இருந்தவர்களினதும் ஜனாதிபதிகளினதும் புகைப்படங்களுடன் வாழ்த்து செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.