பௌத்த தர்மத்தை கட்டியெழுப்புவதற்காக பல காரியங்களை செய்துள்ளோம் 

அச்சிடுக
பௌத்த தர்மத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் என்ற வகையில் பல்வேறு காரியங்களையும் திட்டங்களையும் செயற்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இலுக்ஹேன பேருவெவ சுதர்மாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நூலகம், இரு மாடி கட்டடம் ஆகியவற்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
விகாரை,பிரிவென் அபிவிருத்திக்காக அரசாங்கம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களின் ஊடாக பல்வேறு காரியங்களை செய்துள்ளோம். இந்த நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம் என்றார்.