தேசிய பாடசாலையில் மூன்று வருடங்கள் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு தங்களின் பிள்ளைகளை அதே பாடசாலையில் இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு

அச்சிடுக
கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் ஆலோசனை

தேசிய பாடசாலைகளில் மூன்று வருடங்கள் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு தங்களின் பிள்ளைகளை அதே பாடசாலையில் இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்குமாறு கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் இன்று (10) அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பல்லாயிர கணக்கான மாணவர்களின் கற்றல் - கற்பித்தல் பணிகளில் ஈடுப்படும் ஆசிரியர்கள் தமது பிள்ளைகளை தாம் பணிபுரியும் பாடசாலைகளில் எந்தவொரு முரண்பாடும் இன்றி  இணைத்துக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் முகமாக கல்வி அமைச்சர் குறித்த ஆலோசனையை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
1,5,6 மற்றும் 11 ஆம் வகுப்புகள் தவிர ஏனைய  இடைநிலை வகுப்புகளுக்கு மாத்திரமே இந்த தீர்மானம் செல்லுப்படியாகும்.