தேசிய பாடசாலையில் மூன்று வருடங்கள் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு தங்களின் பிள்ளைகளை அதே பாடசாலையில் இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்குவதற்கான நியமனம் நேற்று (29) கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.