பட்டதாரிகளுக்கு உரிய முறைமையின் கீழ் தொழில் வாய்ப்புகளை வழங்குவதே எமது நோக்கம்  

அச்சிடுக
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையின் கீழ் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டத்தை செயற்பாட்டுக்கு கொண்டு வர முடிந்தமையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். 1980 ஆம் தொடக்கம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கு அப்போதைக்கு அமைச்சராக இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்ததாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் 16800 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் புதிதாக அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட 1347 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும்  நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ள பட்டதாரிகள் 16800 பேரில் 5000 பேர் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.