நூல்களாகிய தோழர்களே நேசமிகு நண்பர்கள் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் அதிகமாக புத்தகங்களை வாசிக்கும் மாணவர்களுக்கு பதக்கம் ...

அச்சிடுக

பாடசாலை மாணவர்கள் மத்தியில் வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்குடன் பாடசாலை கட்டமைப்பில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நூல்களாகிய தோழர்களே நேசமிகு நண்பர்கள் என்ற வேலைத்திட்டம் தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. இதன் முதற் கட்டத்திற்கான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு செப்டம்பர் மாதமளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அதிக நூல்களை வாசித்தோருக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.இதன்படி 3000 பேர் பதக்கங்கள் பெறுவதற்கு தகுதிப் பெற்றுள்ளனர்.