பிந்திய செய்திகள்

13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி திட்டத்தின் கீழ் தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க பிரபல நிறுவனங்களிடம் இருந்து தற்போதே கோரிக்கை

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 
 
13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி திட்டத்தின் கீழ் தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பாடசாலை கல்வி முடிவதற்கு முன்னர் பிரபல நிறுவனங்களிடமிருந்து தற்போது தொழில் வாய்ப்புகளுக்கு கோரிக்கை வந்துள்ளதாக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்கள் தெரிவித்தார்.
 
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி திட்டத்தின் கீழ் தொழிற்கல்விக்காக தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல ஆசிரிய வெற்றிடங்களுக்காக பட்டதாரிகள் 226 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 

Search