ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தொடர் குண்டு வெடித்தமை எமக்கு பெரும் சந்தேகம்

அச்சிடுக

– சபையில் அகில விராஜ்

ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தொடர் குண்டு வெடித்தமை எமக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தொடர் குண்டு வெடிப்பை பயன்படுத்தி ஒருசிலர் அரசியல் செய்கின்றனர். இது சிறந்த ஒன்றல்ல. ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள தருணத்தில் இவ்வாறான சம்பவம் ஏற்பட்டமை எமக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதனின் உயிருடன் அரசியல் செய்வது உகந்தது அல்ல. மேலும் எதிரணி சார்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் இனவாதத்தை கக்கி வருகின்றார்.எனவே பதவி ஆசைகளுக்காக ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்து குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.  என்றார்