வரலாற்றில் முதற்தடவையாக சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சை சான்றிதழ்களை இணையளத்தின் (online) ஊடாக பெறமுடியும்.

அச்சிடுக

 

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்படும் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சை சான்றிதழ்களை பெற வேண்டுமாயின் பரீட்சைகள் திணைக்களத்திற்கு வர வேண்டிய நிலைமை இவ்வளவு காலம் இருந்தது.

சான்றிதழ்களை பெறுவதற்கு பல பிரதேசங்களில் இருந்தும் நாள்தோறும் பெரும்பாலானோர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு வருகை தருகின்றனர். இதன்காரணமாக சான்றிதழ் வழங்கும் செயல் முறைக்கான காலம் அதிகமாக இருப்பதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக தீர்வினை வழங்குவதற்கு கல்வி அமை;சசர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் ஆலோசனைகளின் பேரில் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்வி கட்டமைப்பில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வரலாற்றில் முதற்தடவையாக கல்வி பொதுத்தராதர சாதாணர தர மற்றும் உயர் தர பரீட்சை சான்றிதழ்களை இணையத்தளங்களின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் செயற்பாடுகளை நவீனமயப்படுத்துவதற்கான 2017 ஆம் ஆண்டு கல்வி அமைச்சரின் ஆலோசனை பேரில் விசேட புத்திஜீவிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரையின் பிரகாரம் குறித்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் பரீட்சை சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக இனிமேல் பரீட்சைகள் திணைக்களத்திற்கு வர வேண்டியதில்லை. இதன்படி நவீனமயப்படுத்தப்பட்ட பரீட்சைகள் திணைக்களத்திற்கான இணையதளத்தின் ஊடாக பரீட்சை சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இணையதளத்தின் ஊடாக எவ்வாறு சான்றிதழை பெற்றுக்கொள்ளல் மற்றும் பணம் செலுத்தல் போன்ற செயல் முறை கீழ்வருமாறு,