பிந்திய செய்திகள்

மீரிகமவில் நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கையின் இரண்டாவது மும்மொழி தேசிய பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை.....

 
 
இலங்கையின் இரண்டாவது மும்மொழியுடன் கூடிய கலப்பு தேசிய பாடசாலையாக மினுவன்கொட கல்வி வலயத்திற்குட்பட்ட மீரிகம, பஸ்யாலயில்  1,142 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள தொன் ஸ்டீவன் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை (20) நடைபெறவுள்ளது. கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்களின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த நிகழ்வுக்கு கலந்து கொள்ளவுள்ளார். இந்த பாடசாலை 12 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் திறன் வகுப்பறை உட்பட அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்படவுள்ளன.

Search