பிந்திய செய்திகள்

கல்வி துறையை கட்டியெழுப்புவதற்காக நான்கு ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளேன்.

- கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

குளியாபிட்டிய மத்திய கல்லூரியில் புதிய நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகம், பற் சிகிச்சை நிலையம், உள்ளக விளையாட்டரங்கை திறந்து வைத்தல் மற்றும் மூன்று மாடி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவா று தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
பெரும்பான்மை பலம் கொண்ட ஆட்சி எம்மிடல் இல்லை. ஜனாதிபதி வேறு கட்சி, மாகாண சபை அதிகாரங்களும் வேறு கட்சியிடம், இவ்வாறு இருக்கும் நிலைமையிலேயே பாரியளவிலான வேலைகளை முன்னெடுத்துள்ளோம். அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டம் என்னுடைய எண்ணக்கருவில் முன்னெடுக்கப்பட்ட திட்டமாகும். நான் பாடசாலைக்கு நடந்தே கல்வி பயில சென்றுள்ளேன்.இதன்படிதான் நகரத்திலுள்ள பாடசாலைகளில் உள்ள வசதிகளை கிராமத்திலுள்ள பாடசாலைகளுக்கும் வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்ததிட்டத்தை ஆரம்பித்தேன். அதிகாரங்கள் போதியளவு இல்லாத போதும் கல்வி துறையை கட்டியெழுப்புவதற்காக நான்கு ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளேன் என்றார்.

Search