பிந்திய செய்திகள்

இலங்கையின் இரண்டாவது மும்மொழி கல்வியுடன் கூடிய தொன் ஸ்டீவன் கல்லூரிக்கு மீரிகமயில் அடிக்கல் நாட்டப்பட்டது

இலங்கையின் இரண்டாவது மும்மொழி கல்வியுடன் கூடிய கலப்பு தேசிய பாடசாலையாக நிர்மாணிக்கப்படவுள்ள தொன் ஸ்டீவன் கல்லூரிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் மீரிகமயில் இன்று (20) அடிக்கல் நாட்டப்பட்டது. நாட்டின் சிறார்களின் பெருமளவிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அருகிலுள்ள பாடசாலையை சிறந்த பாடசாலையாக மாற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் நடடிவக்கைகளின் முக்கியமான செயற்பாடாக இது அமைந்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் கோரிக்கையின் பிரகாரம் 1,142 மில்லியன் ரூபா செலவில் குறித்த பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது. 12 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த பாடசாலையில் திறன் வகுப்பறை உட்பட அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்படவுள்ளன.

Search