பிந்திய செய்திகள்

மனிதநேயம் தெரிந்த சிறுவர்களை உருவாக்குவதே தற்போது எமக்குள்ள ஒரே சவால்

மனிதநேயம் தெரிந்த சிறுவர்களை உருவாக்குவதே தற்போது எமக்குள்ள பிரதான சவாலாகும் என கல்வி அமைச்சர் சட்டதரணி  அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் ஹொரன வித்தியாரத்ன கல்வியற் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பல் தொழில்நுட்ப கட்டடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும்  உரையாற்றுகையில்,
நாட்டின் கல்வி கட்டமைப்பின் ஊடாக செயற்கையான உலகில் தனிப்பட்ட சிறுவர்களை அன்றி மனிதநேயம் தெரிந்து அதன்படி செயற்படுவோரையே உருவாக்க வேண்டும். அதுவே எமக்கு தற்போதுள்ள பாரிய சவாலாகும் என்றார்.

Search