இலங்கை பிரிவெனா கல்வியை கட்டியெழுப்புவதற்காக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட பிரிவெனா சட்டமூலத்தை திருத்துவதற்கு தற்போதைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் நடவடிக்கை எடுததுள்ளார்.
சங்கபீடமும் பிரிவெனாதிபதிகளும் விடுத்த கோரிக்கைகளின் பிரகாரம் பிரிவெனா சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பிரிவெனா கல்வி சபையும் குறித்த திருத்தங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.