பிந்திய செய்திகள்

13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி வேலைத்திட்டத்திற்காக புதிதாக 5000 ஆசிரியர்கள்...

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எவ்வாறு இருப்பினும் அதனை கருத்திற்கொள்ளாது அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட தொடர் கல்வியை பயில்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும். இதன்படி 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி வேலைத்திட்டத்திற்காக மேலும் 5000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுக்கு அறிவித்தினார்.

Search