பிந்திய செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி விசேட மாநாட்டில் கல்வி அமைச்சர், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் ஆற்றிய உரை...

சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று(03) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி விசேட மாநாட்டில் கல்வி அமைச்சர், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் ஆற்றிய உரை...

எமது கட்சியை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக்கும் நோக்கில் இன்றைய மாநாட்டுக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் போது பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தன. கட்சி பிளவுப்படுவதனை தடுத்து சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்து கட்சியை ஐக்கியப்படுத்தியமைக்கு இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பிரதமரின் செயலானது தற்போது காணப்படும் அதிகாரத்தை கைப்பற்ற முனையும் அரசியல் போட்டியில் கண்டுக்கொள்ள முடியாத முன்னுதாரணமாகும்;
சுதந்திரத்திற்கு பின்னர் உருவான நாட்டின் பழைமையான கட்சிகள் பல தற்போது பிளவுப்பட்டுள்ளன. எனினும் ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுப்படாமல் தடுப்பதற்கு கட்சி தலைமைத்துவம் முன்னின்று செயற்பட்டமையினால் எம்மால் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முடிந்ததோடு மாத்திரமின்றி நவம்பர் 16 ஆம் திகதி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கவும் முடியும். சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி கதிரையில் அமரவைப்பதற்கு நிபந்தனைகள் எதுவுமின்றி அனைவரும் பாடுப்பட வேண்டும். சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகுவதன் மூலம் எமது கட்சியை ; பாதுகாக்கவும் தற்போது எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை வெற்றிகரமாக முன்கொண்டு செல்வதற்கும் முடியும். 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதி ஒருவர் எமது கட்சிக்கு கிடைக்காமையினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு எமக்கு முகங்கொடுக்க நேரிட்டது. அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட எமது கட்சியினருக்கு நீதியை நிலைநாட்ட முடியாமல் போனது. இவ்வாறான அனைத்து பிரச்சினைகளுக்கும் இன்னும் ஒன்றரை மாதத்தில் தீர்வு கிடைக்கும்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டமையினால் பொதுஜன பெரமுனவினர் பெரும் துக்கத்திலும் சோகத்திலும் உள்ளனர். வேட்பாளரை தெரிவு முடியாமல் நாம் பிளவுப்படுவோம் என எதிர்க்கட்சியினர் நினைத்ததோடு மாத்திரமின்றி எமது பங்காளி கட்சிகளும் பிரிந்து செல்லும் என்றே கருதினர். எனினும் எதிர்க்கட்சியினரின் இவ்வாறான பகல்கனவுகளுக்கு சஜித் பிரேமதாச சரியான பதிலை வழங்கியுள்ளார்.
அத்துடன் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி கதிரையில் அமர வைப்போம். அதுமாத்திரமின்றி எதிர்வரும் 10 ஆம் திகதி காலி முகத்திடலில் நடக்கவுள்ள மாபெரும் பொதுக் கூட்டத்தில் இலட்ச கணக்கான மக்களை அழைத்து வந்து எமது பலத்தை நாம் காட்டுவோம் என்றார்

Search