பிந்திய செய்திகள்

24 வது சர்வதேச இளைஞர் விஞ்ஞான போட்டியில் வெற்றிபெற்றவர்களை கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் சந்தித்தார்

2017 ஏப்ரல் மாதம் 16-ம் திகதி முதல் 22-ம் திகதி வரையில் ஜெர்மனியின் ஸ்டுட்காடில் நடைபெறவுள்ள 24 வது சர்வதேச இளைஞர் விஞ்ஞான போட்டியில் தமது விஞ்ஞான ஆராய்ச்சியை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பு கிடைத்த சிறுவர்கள் இருவரும் விமான பயணச்சீட்டுகளை கல்வி அமைச்சர் அவர்களிடமிருந்து ஏப்ரல் மாதம் கல்வி அமைச்சில் பெற்றுக்கொண்டனர். Modification of Microbiology fuel cells via the immobilization of the anaerobe Clostridium butyricum and Escherichia coli-XII blue எனும் ஆராய்ச்சியை முன்வைத்த மன்னார் சித்தி வினாயகர் இந்து வித்தியாலயத்தின் மாணவர் ஜிதேந்திரன் ஜுட் சஜித் மற்றும் Deposition of air pollutants on pollen grains and occurrence of respiration allergies among humans எனும் ஆராய்ச்சியை முன்வைத்த கொழும்பு நாலந்த வித்தியாலயத்தின் மாணவர் ரகிந்து விக்கிரமரத்ன ஆகியோராவர்.

மேற்படி போட்டியில் வெற்றிப் பெற்று நாட்டிற்கு சிறந்த கீர்த்தியை பெற்றுக்கொடுத்த மாணவர்களை கல்வி அமைச்சர் பாராட்டினார். பாடசாலை மட்டத்தில் ஆராய்ச்சி கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கான “சுபக புலமைப்பரிசில் ஆலோசனை திட்டத்தை” பாடசாலை முறையில் அறிமுகப்படுத்துவதால் புதிய கண்டுப்பிடிப்புகள் மற்றும் நிர்மாணித்தல் போட்டியில் மாணவர்களின் திறமை மேலும் வெளிப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் அவர்கள் மற்றும் விஞ்ஞான கிளைப் பணிப்பாளர் எம்.பி.விபுலசேன அவர்களோடு பலரும் கலந்துகொண்டனர்.

Search