பிந்திய செய்திகள்

நல்லிணக்கத்தை வலுவூட்டும் முகமாக தமிழ் - சிங்கள இலக்கிய நூல்கள் மொழிபெயர்ப்பு திட்டம் ஆரம்பம்

 
தெய்வேந்திர முனையில் இருந்து பருத்திதுறை வரையிலான இலக்கிய பாலம் என்ற தொனிப்பொருளின் கீழ் தமிழ் - சிங்கள இலக்கிய நூல் மொழிபெயர்ப்புச் செயற்திட்டத்தின் ஆரம்பம் நிகழ்வு இன்று (28) கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
 
தேசிய நல்லிணக்க செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் முகமாக இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையில் இலக்கிய பரிமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட நூல்கள் தமிழ் மொழியிலும் தமிழ் மொழியில் எழுதப்பட்ட நூல்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் ஆலோசனையின் கீழ் குறித்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
 
இந்த செயற்திட்டத்தின் முதற்கட்டமாக இலக்கிய நயம் கொண்ட 7 சிங்கள நூல்கள் தமிழ் மொழியிலும் 7 தமிழ் நூல்கள் சிங்கள மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இன்று கல்வி அமைச்சரிடம் ஒப்படைக்கபட்டன.

Search