பிந்திய செய்திகள்

பாடசாலைகளுக்கான முதலாம் தவனை ஏப்ரல் ஐந்தாம் திகதி நிறைவு

2019 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான முதலாம் தவனை ஏப்ரல் ஐந்தாம் திகதி நிறைவுபெறவுள்ளதுடன் இரண்டாம் தவனைக்கான பாடசாலை நடவடிக்கைகள் ஏப்ரல் 22 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும்.
 
முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாவது தவனை ஏப்ரல் 11 ஆம் திகதி நிறைவு பெறுவதுடன் இரண்டாம் தவனைக்கான பாடசாலை நடவடிக்கைகள் ஏப்ரல் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
அத்துடன் பாடசாலைகளுக்கான தவனை காலம் நிறைவு பெறுவதற்கு முன்னர் டெங்கு நோய் ஒழிப்புக்கான சிரமதான வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடுகள் செய்துள்ளன. இந்த சிரமதான பணிகள் இரண்டாம் தவனைக்கான பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் வரையான காலப்பகுதிக்குள்; குறித்த சிரமதான வேலைத்திட்டம் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும். 
 

Search