பிந்திய செய்திகள்

 3888 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு திங்களன்று நியமனம்

சர்வதேச,தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் வெற்றிப்பெற்ற விளையாட்டு வீரர்கள் 3888 பேர் பாடசாலை விளையாட்டு துறையை கட்டியெழுப்புவதற்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக பாடசாலையில் சேவைக்கு அமர்த்தப்படவுள்ளனர்.
 
இதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் பங்கேற்றலுடன் திங்கட்கிழமை (13) முற்பகல் 11.30 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறும்.
 
திறமை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்களில் நேர்முக பரீட்சையின் தெரிவு செய்யப்பட்ட 3888 பேருக்கு கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வதிவிட பயிற்சி வழங்கி பாடசாலைகளில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர்.
 

Search