பிந்திய செய்திகள்

பட்டதாரிகள் 592 பேர் இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைப்பு

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளின் சிங்கள மற்றும் தமிழ் மொழி பிரிவுகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை உள்வாங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்க்கப்பட்ட அபிவிருத்தி அலுவலர்கள் 592 பேரை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள அபே கம அரங்கில் இன்று (30) நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்

Search