பிந்திய செய்திகள்

தேசிய கல்வியற் கல்லூரியின் ஊடாக பூர்த்தியாக பயிற்சி பெற்ற 2378 பேருக்கு தேசிய போதனா கல்வி டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் பங்கேற்றலுடன் இன்று (22) காலை அலரிமாளிகையில் நடைபெற்றது.

அண்மையில் ஏற்பட்ட வன்முறையினால் பாதிக்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல , கொடம்பபிட்டிய மற்றும் பன்டுவஸ்நுவர பகுதிகளில் தற்போதைய நிலைமைகளை கண்டறிந்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து ..

அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் பெரும் ஆதரவு
 
அனைத்து பாடசாலைகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக பாதுகாப்பு துறையினர் கூறியதன் பின்னர் நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் இன்று (06) இரண்டாம் தவனைக்காக ஆரம்பிக்கப்பட்டது.
 
எனினும் இன்றைய தினம் மாணவர்களின் வரவு குறைந்த மட்டத்தில் இருந்ததாக தெரியவருகின்றது. கொழும்பு நகர பாடசாலைகளின் வரவு பெருமளவில் குறைந்திருந்த போதிலும் கிராமிய பாடசாலைகளின் வரவு அதிகரித்திருந்ததாக கல்வி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
அத்துடன் இன்றைய அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்களினதும் பாடசாலை ஊழியர்களினதும் வருகை உயர்ந்த மட்டத்தில் இருந்தமை விசேட அம்சமாகும். 
 
ஆனாலும் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையான ஆரம்ப பிரிவுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவில்லை. எதிர்வரும் 13 ஆம் திகதி 1-5 வரையான வகுப்புகளுக்கான இரண்டாம் தவனைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எவ்வாறாயினும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது.
 
கடந்த தினங்களில் ஏற்பட்ட அசாதாரணமான நிலைமைக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து நாட்டின் அனைத்து செயற்பாடுகளையும் இயல்பு நிலைமைக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கும் இந்த தருணத்தில் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படும் குழுக்களின் போலியான பிரசாரங்களை புறந்தள்ளிவிட்டு தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நன்றி தெரிவித்துள்ளதுடன் மாணவர்களின் பாதுகாப்புக்காக அர்ப்பனிப்புடன் செயற்படும் பாதுகாப்பு படையினருக்கும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அமைச்சர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
 
எனினும் இந்த சந்தர்ப்பத்தில் தமது தொழிற்சங்கங்களில் பிரபலத்தை பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் ஒரு சில தொழிற்சங்கங்கள் மக்களை திசைத்திருப்பும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பும் செயலை கல்வி அமைச்சு வண்மையாக கண்டிக்கின்றது.
 
சமூகத்திற்கு மத்தியில் தமது பிரபலத்திற்காக செயற்படும் தொழிற்சங்கங்களை பார்க்கிலும் மாணவர்கள் மற்றும் பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு துறைக்கும் இருப்பதனை நினைவூட்ட விரும்புகின்றோம்.இவ்வாறான துக்ககரமான சந்தர்ப்பத்தில் வாதங்களை புறந்தள்ளிவிட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தவும் அவர்களது கல்வி நடவடிக்கைகளுக்கு எந்தவொரு இடையூம் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் நாம் அனைவரும் செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்த விரும்புகின்றோம்.
 

பாடசாலைகளில் பாதுகாப்பு உறுதிப்படுத்தியதன் காரணமாகவே மாணவர்களின் வருகையை எதிர்பார்கின்றோம். அரசியலுக்காக மாணவர்களை பழியாக்காமல் அரசியல் தலைவர் சரியானதை செய்ய வேண்டும் – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

சர்வதேச,தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் வெற்றிப்பெற்ற விளையாட்டு வீரர்கள் 3888 பேர் பாடசாலை விளையாட்டு துறையை கட்டியெழுப்புவதற்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக பாடசாலையில் சேவைக்கு அமர்த்தப்படவுள்ளனர்.
 
இதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் பங்கேற்றலுடன் திங்கட்கிழமை (13) முற்பகல் 11.30 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறும்.
 
திறமை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்களில் நேர்முக பரீட்சையின் தெரிவு செய்யப்பட்ட 3888 பேருக்கு கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வதிவிட பயிற்சி வழங்கி பாடசாலைகளில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர்.
 

அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னரே பாடசாலையை ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுத்தேன்.
- கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 
 
அனைத்து பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கைகளை  முப்படையும் பொலிஸூம் இணைந்து ஆரம்பித்துள்ளதாக 14 ஆவது படையணியின் பிரகேடியர் ரன்துல ஹத்னாகொட தெரிவித்தார்.
 
மே மாதம் முதலாம் திகதி முதல் அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை வளாக  பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்
மேலும் பாடசாலை நுழைவாயிலில் பரிசோதணை குழுவொன்றை பாதுகாப்புக்கு அமர்த்தவுள்ளோம் என்றார்.
 
இதன்போது  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறும் போது,
 
உளவு பிரிவினதும் பாதுகாப்பு சபையினதும் உறுதிப்படுத்தியதன் பின்னரே எதிர்வரும் 6 ஆம் திகதி பாடசாலை ஆரம்பிப்பதற்கு  ஜனாதிபதியும் அமைச்சரவையும் தீர்மானம் எடுத்தது.  தற்போது  அனைத்து பாடசாலைகளிலும் பரிசோதனை நடவடிக்கைகளை பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். எனவே பாதுகாப்பு பிரிவினருக்கு நான் நன்றி கூற  விரும்புகின்றேன் என்றார்.
 
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கொழும்பு நகரிலுள்ள பாடசாலைகளுக்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது ஆனந்த கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க மற்றும் பிரகேடியர் ரன்துல ஹத்னாகொட ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னரும் பின்னருமான பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

2019 மே மாதம் 18 ஆம் திகதி பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலை நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளும் நோக்கில் விளையாட்டு வீரர்கள் 12 பேர் இன்று கல்வி அமைச்சில் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
 

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்குமாறு ஆலோசனை

 

பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளின் பிரகாரம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் கடந்த திங்கட்கிழமை பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

 

இந்நிலையில் தற்போது பாடசாலைகளில் மாணவர்களின் வரவு அதிகரித்துள்ளது. எனவே பாடசாலை நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுத்து செல்லுமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலை பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

 

எனினும் ஒரு சில குழுவினர் பாடசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருவதாக கல்வி அமைச்சுக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன. இந்த குழுவினர் பாடசாலைகளுக்கு வரக்கூடாது என அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழுத்தம் பிரயோகம் செய்து வருகின்றனர்.

 

ஆகவே மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படும் குழுக்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறான குழுக்கள் மற்றும் தனி நபர்களுக்கு தொடர்பாக குற்ற விசாரணை பிரிவிற்கு தகவல்களை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவுறுத்துகின்றது.

பாதுகாப்பு பிரிவின் பூரண உடன்பாட்டை பெற்றதன் பின்னர் எதிர்வரும் ஆறாம் திகதி அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

 இன்று (02) அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் உரையாற்றுகையில்,

பாடசாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக  18 விடயங்களை உள்ளடக்கிய விசேட சுற்றுநிருபமும் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. முப்படைகளினதும் உளவு பிரவினதும் ஆலோசனைகளை செவிமடுத்த பின்னரே தீர்மானம் எடுக்க வேண்டும். அதற்கும் மாற்றமாக எம்மால் எந்தவொரு தீர்மானமும் எடுக்க முடியாது.   பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது பாதுகாப்புடன் கூடிய இடமாக பரிசோதனைகளின் பின்னர் உறுதிப்படுத்துவதாகவும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என முப்படை பிரதானிகளிடம் வாய்மூலமாகவும் எழுத்து மூலமாகவும் கோரியுள்ளேன். மேலும் கத்தோலிக்க பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் பாதுகாப்பு பிரதானிகளுடனும் கர்தினால் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளேன் என்றார்

அண்மையில் ஏற்பட்ட வன்முறையினால் பாதிக்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல , கொடம்பபிட்டிய மற்றும் பன்டுவஸ்நுவர பகுதிகளில் தற்போதைய நிலைமைகளை கண்டறிந்த பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து ...

– சபையில் அகில விராஜ்

ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தொடர் குண்டு வெடித்தமை எமக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தொடர் குண்டு வெடிப்பை பயன்படுத்தி ஒருசிலர் அரசியல் செய்கின்றனர். இது சிறந்த ஒன்றல்ல. ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள தருணத்தில் இவ்வாறான சம்பவம் ஏற்பட்டமை எமக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதனின் உயிருடன் அரசியல் செய்வது உகந்தது அல்ல. மேலும் எதிரணி சார்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் இனவாதத்தை கக்கி வருகின்றார்.எனவே பதவி ஆசைகளுக்காக ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்து குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.  என்றார்

உடன் விண்ணப்பிக்குமாறு கல்வி அமைச்சர் கோரிக்கை  
 
பாதிக்கப்பட்ட மாணவர்கள் சுரக்சா காப்புறுதி திட்டத்தின் பயன்களை பெறமுடியும்.
எனவே தேவையான மாணவர்கள் உடன் விண்ணப்பிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்தார்.
 
அலரிமாளிகையில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
 
தீவிரவாத தாக்குதலின் காரணமாக பல சிறுவர்கள் உயிரிழந்தனர். அதுமாத்திரமின்றி பலர் காயமடைந்தனர். எனவே பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக சுரக்சா காப்புறுதி திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். இதன்படி இவ்வருடத்திற்கான காப்புறுதி பிரதிலாப தொகை அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சுரக்சா காப்புறுதியின் பயன்களை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும். மாணவர் ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் காப்புறுதியின் ஊடாக 2 இலட்சம் ரூபா பெற்றுக்கொள்ள முடியும். எனவே தேவையுள்ள மாணவர்கள் உடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

Search