பிந்திய செய்திகள்

இந்தியாவில் இருந்து குழுவொன்றும் வருகை 
 
பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்களின் உளவியல் பலத்தை அதிகரிக்க விசேட வேலைத்திட்டமொன்றை கல்வி முன்னெடுக்கவுள்ளதாகவும் இதற்காக இந்தியாவில் இருந்து குழுவொன்றும் வருகை தந்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
 
அலரிமாளிகையில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
 
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பில் மாத்திரம் நாம் கவனம் செலுத்தவில்லை. தீவிரவாத தாக்குதல் காரணமாக அதிகளவிலான சிறுவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று மனதளவில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்களின் உளவியல் பலத்தை அதிகரிக்கும் நோக்குடன் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக விசேட குழுவினர் இந்தியாவில் இருந்து இலங்கை வருகை தந்துள்ளனர். இதன்போது மனோவியல் ஆலோசனைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும். இந்த வேலைத்திட்டம் பயிற்சி பெற்ற அதிகாரிகள் மூலம முன்னெடுக்கப்படும் என்றார். 

3888 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (29) அலரிமாளிகையில் நடைபெறவிருந்த நிலையில் நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கு கொண்டு அந்த நிகழ்வை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும். அதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும்

யுனிஸ்கோ அமைப்பின் இலங்கைக்கான தலைவரும் அவ்வமைப்பின் நிறைவேற்று சபையின் உறுப்பினருமான கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களும் பங்கேற்பு

 

 யுனிஸ்கோ அமைப்பின் 206 ஆவது நிறைவேற்று சபை கூட்டம் நேற்று முன் தினம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்றது.இந்த நிறைவேற்று சபை கூட்டத்திற்கு யுனிஸ்கோ அமைப்பின் இலங்கைக்கான தலைவரும் அவ்வமைப்பின் நிறைவேற்று சபையின் உறுப்பினருமான கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

 யுனிஸ்கோ அமைப்பின் 206 ஆவது நிறைவேற்று சபை கூட்டத்தை ஆரம்பித்து உரையாற்றிய அந்த அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரி அசுலே அவர்கள்,  யுனிஸ்கோ அமைப்பு தற்காலத்தில் முகங்கொடுத்து வருகின்ற சவால்களுக்கு பதில் அளித்தார். யுனிஸ்கோ அமைப்பின் நடவடிக்கைகளை பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விசேடமாக கல்வி, பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வி, ஊடக சுதந்திரம், வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுவது போன்ற விவகாரங்கள் தொடர்பில் அவர் சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தார்.

 கல்வி துறை தொடர்பாக உரையாற்றிய பணிப்பாளர் நாயகம், 21 ஆம் நூற்றாண்டின் போது சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கு கல்வி பயில்வதன் அவசியத்தை உணர்த்தினார். மேலும் கல்வியின் புதிய தரத்தை அபிவிருத்தி செய்வதற்காக அடுத்த யுனிஸ்கோ பொதுக் கூட்டத்தொடரின் போது கல்வி தகைமைகளை ஏற்றுக்கொள்வதற்கான பிரகடணமொன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 யுனிஸ்கோ நிறைவேற்று சபை கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கைகான யுனிஸ்கோ அமைப்பின் தலைவர் மற்றும் அவ்வமைப்பின் நிறைவேற்று சபையின் உறுப்பினருமான கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் கல்வி துறையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து நிறைவேற்று சபையில் தெளிவூட்டினார்.

 நவீன உலகின் தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இலங்கை கல்வி கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் கல்வி அமைச்சின் ஊடாக நடடிவடிக்கை முன்னெடுத்துள்ளதாக கூறிய கல்வி அமைச்சர், 13 வருட தொடர் கல்வி திட்டம் தொடர்பாகவும் யுனிஸ்கோ நிறைவேற்று சபை கூட்டத்தில் அறிவுறுத்தினார். க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெறாத மற்றும் தொழில் திறமைகளை பெற்றுக்கொள்ள முடியாத சிறுவர்கள் முகங்கொடுக்க நேர்ந்துள்ள சமூக நெருக்கடிகளை தீர்க்கும் வகையில் குறித்த திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 மேலும் சிறுவர்களின் கல்வி தொடர்பான முரண்பாடுகளை நீக்கும் வகையிலும் கல்விக்கான சம வாய்ப்புகளை மேலும் விஸ்தரிக்கும் நோக்கிலும் முன்னெடுத்து வரும் அருகாமை பாடசாலை – சிறந்த பாடசாலை வேலைத்திட்டம் தொடர்பாகவும் கல்வி அமைச்சர் நிறைவேற்று சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தார்.

 இதற்கு அப்பால் 5 வயது தொடக்கம் 19 வயது வரையான அனைத்து சிறுவர்களுக்கும்  சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்பாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தார். இலங்கை அரசாங்கம் சிறுவர்களின் சுகாதார பாதுகாப்புக்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் யுனிஸ்கோ நிறைவேற்று சபையின் பாராட்டுக்கு உள்ளாகியது.

 

கல்வி அமைச்சின் மனித வள அபிவிருத்தி கிளை மற்றும் சுகாதார, விளையாட்டு மற்றும் உடற்கல்வி கிளை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள அரச பாடசாலைகளில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான சேவை ஆரம்ப பயிற்சி 2019.05.06  ஆம் திகதியில் இருந்து பூரண வதிவிட பயிற்சியாக தொடர்ந்து 6 வாரங்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இந்த பயிற்சிக்கான ஆரம்ப நிகழ்வு 2019.05.05 ஆம் திகதி மாகாண மட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பாடசாலையினதும் பாடசாலை மாணவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் ஆலோசனையின் பேரில் விசேட சுற்;றுநிருபம் ஒன்றை வெளியிடுவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
 
இதன்பிரகாரம் பாடசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டத்தின் கீழ் பாடசாலை சமூகத்தை அறிவுறுத்தல், பாதுகாப்பு குழுவை அமைத்தல், பாதுகாப்பு தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்த சுற்றுநிருபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பாடசாலை சமூகத்தை அறியதருதலின் கீழ் பாடசாலையின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் நிலைமைகளின் போது இடர்நேர்வு நிலவரத்தை இனங்காணல் மற்றும் தவிர்த்தல், பாதுகாப்பு வேலைத்திட்டத்தை தயாரித்து மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் பழைய மாணவர்களுக்கு அறிய தர நடவடிக்கை எடுக்க வேண்டும் சுற்றுநிருபத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இதற்கு அப்பால் பாடசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளின் பங்கேற்போடு பாதுகாப்பு குழுவொன்றை நிறுவுமாறு சுற்றுநிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலை பாதுகாப்பு தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பல சுற்றுநிருபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
இதன்படி மாணவர்களின் வருகை மற்றும் வெளியேறல் நுழைவாயில்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களது புத்தக பை, பயண பொதிகளை பரிசோதனை செய்வதுடன் பாடசாலைக்கு வருகை தரும் மாணவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும், பாடசாலை வதிவிடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், அவசர நிலைமைகளின் போது செயற்பட வேண்டிய விதம் குறித்து தொடர்பாடல் முறைமையொன்றை கடைப்பிடித்தல் உட்பட 18 விடயங்கள் குறித்து சுற்றுநிருபத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
இந்த சுற்றுநிருபம் மாகாண பிரதம செயலாளர்கள்,மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், அரச மற்றும் தனியார் பாடசாலை பிரதானிகள் மற்றும் பிரிவெனா பிரதானிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 

அதற்கான சுற்றுநிருபம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது
 
- கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்
 
 ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை இனிமேல்  கட்டாயம் இல்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
 
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்குவதற்காகவும் 6 ஆம் வகுப்புக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காகவும் வருடாந்தம் ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சை நடத்தப்பட்டு வருகின்றது.
 
எனினும் அடிப்படை நோக்கங்களுக்கு மாற்றமாக சிறுவர்களை மனதளவில் பாதிக்கும் போட்டி பரீட்சையாகவும் மாணவர்கள் மீது  எல்லைமீறிய அழுத்தங்களை பிரயோகிக்கும் போட்டி தன்மை கூடியதாக மாறியுள்ளதாக உளவியல் நிபுணர்களும் கல்வியிலாளர்களும் தெரிவிக்கின்றனர்.
 
எனினும் பல்வேறு சந்தர்ப்பங்களில் புலமை பரிசில் பெறவேண்டிய குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு பதிலாக பிரதான தேசிய பாடசாலை மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சை பெறும் அழுத்தங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் உளவியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
எனவே .இந்த காரணங்களை அடிப்படையாக கொண்டு குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திலுள்ள சிறுவர்களை தவிர ஏனையோருக்கு ஐந்தாம் தர புலமை பரீட்சை கட்டாயம் இல்லை என்பதுடன் குறித்த பரீட்சைக்கு தோற்றுவதற்கு மாணவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்க கூடாது என 08.2019 சுற்றுநிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இனிமேல் மாணவர்களின் விருப்பின் பிரகாரம் பெற்றோர்களின் ஒப்புதலுடன் குறித்த பரீட்சைக்கு தோற்றுவதா? இல்லையா? என மாணவர்களுக்கு முடிவெடுக்க முடியும்.
 
மேலும்  ஐந்தாம் வகுப்பு வரை மாத்திரம் உள்ள ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் புலமை பரிசில் பரீட்சைக்கு எழுதாவிடினும் குறித்த மாணவருக்கு வலயத்திலுள்ள பாடசாலையொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு வலய கல்வி பணிப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு போட்டி தன்மை மேம்ப்படுத்துவதற்காக சுவரொட்டி, பதாகைகள் ஒட்டுவதற்கும் காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இவ்வாறான பிரசாரங்களில் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதனை கருத்திற்கொண்டே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டள்ளது.
 
மேலும் பாடசாலைகளில் 6 ஆம் வகுப்புக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது சுற்று நிருப விதிமுறைகளின் பிரகாரம் வசதிகள் மற்றும் சேவை கட்டணம், பாடசாலை அபிவிருத்தி சங்க கட்டணத்திற்கு பதிலாக வேறு ஏதும் வகையில் மாணவர்களிடம் இருந்து கட்டணங்கள் அறவிடுவது, நன்கொடைகள் பெற்றுக்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் நியமிக்கப்பட்ட ஐந்தாம் தர புலமை பரிட்சை தொடர்பான குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் பிரகாரம் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

உளவுப் பிரிவு தொடர்பாக கூறப்படும் வதந்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. உளவு பிரிவினை அரசாங்கம் ஒருபோதும் முடக்கவில்லை. பல்வேறு குற்றச்சாட்டுகளை அடிப்படையாக கொண்டு நான்கு உளவு பிரிவினரே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
 
குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தோர்களின் சடலத்தினை வைத்து கோத்தாபய ராஜபக்ஷ அரசியல் செய்து ஜனாதிபதி வேட்பாளராக முயற்சிக்கும் செயற்பாட்டை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.
பொலிஸ், இராணுவம், விசேட அதிரடி படைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உளவு பிரிவினர் உள்ளனர். எனினும் கடத்தல் மற்றும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் பிணை வழங்க முடியாத நான்கு பேர் மாத்திரமே சிறையில் உள்ளனர். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடனும் எக்னலியகொட காணாமல் போன சம்பவத்துடனும் தொடர்புடைய உளவு பிரிவினர் ஏற்கனவே  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
உளவு பிரிவினை அரசியல் மயப்படுத்த வேண்டாம். சம்பவம் நடந்து ஒரு வாரத்தில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தமையிட்டு நான் பாதுகாப்பு படையினருக்கு நன்றி கூறுகின்றேன். 
 
சங்ரிலா ஹோட்டலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது அவரின் பாதுகாப்பு பிரதானியாக செயற்பட்டவராகும். எனினும் அவரால் இந்த தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை.
 
கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பில்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரின் மீது தாக்குதல் நடத்திய போது உளவுப்பிரிவு அறிக்கை கிடைக்கவில்லையா என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
 

பாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் ஆலோசனையின் பேரில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்கள் உட்பட ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது கல்வி அமைச்சின் பொறுப்பாகும். இதன்பிரகாரம் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதுடன் பாடசாலை வளாக பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நாட்டின் அனைத்து பாடாசாலைகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னர் பாடசாலைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக குறித்த வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்படவுள்ளது.
 
இது தொடர்பாக கல்வி அமைச்சரும் கல்வி அமைச்சின் செயலாளரும் பாதுகாப்பு பிரதானிகளிடம் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பிலும் விசேட அவாதானம் செலுத்தப்பட்டுள்ளது.

 
 
  • மே மாதத்தில் விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு நியமனம் வழங்கப்படும்
 
 - கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 
 
தொழில் உலகத்திற்கு ஏற்ற வகையில் தொழில் கல்வியை பெற்றுக்கொடுக்கும் 13 வருட தொடர் கல்வியை பூரணப்படுத்தும் மாணவர்களுக்கு க.பொ.த உயர்தர சான்றிதழையும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் NVQ சான்றிதழையும் பெற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
 
பாடசாலை கல்வியின் பின்னர் தொழில் உலகத்திற்கு பிரவேசிக்கும் மாணவர்களுக்கு குறித்த இரு சான்றிதழ்களின் ஊடாக ; எந்தவொரு குறைப்பாடுகளுமின்றி தொழில் உலகத்திற்கு பிரவேசிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (04) மாலை நடைபெற்ற 2017 ஆம் ஆண்டுக்கான பாடசாலை விளையாட்டு வர்ண விருது உற்சவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
 
தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள விளையாட்டு பயிற்சியாளர் 3850 பேருக்கும் மே மாதமளவில் நியமனம் வழங்கி பூரண பயிற்சி அளிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளோம். 
 
விளையாட்டு திறமை வெளிப்படுத்தும் மாணவர்கள் 1000 பேருக்கு சுபக புலமை பரிசில் நிதியத்தின் ஊடாக மாதாந்தம் 2500 ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவையில் பத்திரமொன்றை முன்வைத்து நடைமுறைப்படுத்தப்பட்டுகின்றது.
தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட தேசிய பாடசாலை விளையாட்டு போட்டியின் ஊடாக கிராமிய மற்றும் நகர ரீதியிலுள்ள மாணவர்கள் தமது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டதுடன் விளையாட்டு துறைக்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது.
 
சம ஆரோக்கியத்திற்காக அனைத்து மாணவர்களும் ஏதாவது ஒரு விளையாட்டில் பங்குகொள்ள வேண்டும் என 2015 ஆம் ஆண்டு நான் சுற்று நிருபமொன்றை வெளியிட்டேன். 
நாம் அனைவரும் ஒன்றிணைந்து விளையாட்டு துறையை மேலும் பலப்படுத்தினால் அது பாடசாலை கட்டமைப்புக்கு பெரும் உதவியாக இருக்கும். 
 
அத்துடன் பாடசாலை அபிவிருத்தி அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகளை பாடசாலைகளுக்கு வழங்கியுள்ளோம். விளையாட்டில் ஈடுப்பட்டுள்ள மாணவர்களின் நலன் கருதி சில சுற்று நிருபத்தை மீறி செயற்பட்டுள்ளோம். 
மேலும் 13 வருட தொடர் கல்வியின் ஊடாக சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்றாலும் பெறாவிட்டாலும் எந்தவொரு இடையூறும் இன்றி உயர்தரம் கற்பதற்கு வாய்ப்பு ஏற்படும். 
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வழங்கும் உயர்தர சான்றிதழ் மாத்திரமின்றி NVQ சான்றிதழையும் மாணவர்களுக்கு வழங்குவோம். இதன்ஊடாக தொழில் உலகத்திற்கு செல்வதற்கு மாணவர்களுக்கு எந்தவொரு தடையும் இருக்காது. மேலும் விளையாட்டின் ஊடாக முன்செல்ல முடியுமாயின் பல்கலைகழகம் மற்றும் உயர்தர நிறுவனங்களுக்கு சென்று வெற்றிகரமாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றார்.

கல்வி அமைச்சு அறிவிப்பு 
 
அடிப்படை வாதம் உருவாக காரணம் என குற்றம் சுமத்தப்படும் மத்ரஸா மற்றும் அரபு பாடசாலைகள் கல்வி அமைச்சின் கீழ் இயங்குவதில்லை. குறித்த பாடசாலைகள் கல்வி அமைச்சினால் மேற்பார்வை செய்யப்படுவதில்லை.
 
மத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் இயங்குவதாகவும் கல்வி அமைச்சே குறித்த நிறுவனங்களை ஆரம்பித்ததாகவும் அண்மையில் ஒரு சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
தேசிய, மாகாண பாடசாலைகள், அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தனியார் பாடசாலைகள், பிரிவெனாக்கள் தவிர அரபு பாடசாலைகளோ அல்லது மத்ரஸாக்களோ கல்வி அமைச்சின் கண்காணிப்பில் இயங்குவதில்லை. அதனை கண்காணிக்கும் அதிகாரம் கல்வி அமைச்சுக்கு கிடையாது
 

முதலாம் தவனை பாடசாலை விடுமுறை ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி இரண்டாம் தவனைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவாசம் தெரிவித்தார்.
அத்துடன் கல்வியற் கல்லூரிகளில் பயிலும் போதனா ஆசிரியர்களுக்கான பரீட்சை ஏற்கனவே அறிவித்தப்படி ஏப்ரல் 26 ஆம் திகதி நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலை விளையாட்டு வர்ண உற்சவம் நேற்று (04) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது

Search