பிந்திய செய்திகள்

 2020 ஆம் ஆண்டுக்காக பாடசாலைகளுக்கு பாடப்புத்தகம் விநியோகம் செய்யும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் ஹோமாகமவில் அமைந்துள்ள கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் களஞ்சியசாலை கட்டடத்தொகுதியில் இன்று(16) நடைபெற்றது.

அடுத்த வருடத்திற்கான முதலாம் தவனை ஆரம்பமாவதற்கு முன்னர் தேசிய பாடசாலைகளின் ஆசிரியர் இடமாற்றங்களை நிறைவு செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய பாடசாலைகளின் 2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றத்திற்காக 6000 விண்ணப்பங்கள் தற்போதைக்கு கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளன.ஒரே பாடசாலையில் 10 வருடங்கள் சேவை செய்த ஆசிரியர்கள் 2000 பேரினது விண்ணப்பங்களும் இதில் உள்ளடங்குகின்றன.

ஆசிரிய தொழிற்சங்கங்கள்  உள்ளடங்கும் வகையில் தேசிய பாடசாலைக்கான ஆசிரிய இடமாற்றல் சபையொன்றை நிறுவி குறித்த இடமாற்றங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தீர்மானத்திற்கு அமைய, பத்து வருடங்கள் ஒரே பாடசாலையில் சேவை செய்த ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். 2017 ஆம் ஆண்டு முதல் அமுல்ப்படுத்தப்படும் குறித்த தீர்மானத்திற்கு அமைய, 2017 ஆம் ஆண்டு 12,000 ஆசிரியர்களும் , கடந்த வருடம் 5000 ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளளனர்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எவ்வாறு இருப்பினும் அதனை கருத்திற்கொள்ளாது அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட தொடர் கல்வியை பயில்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும். இதன்படி 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி வேலைத்திட்டத்திற்காக மேலும் 5000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுக்கு அறிவித்தினார்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்குடன் பாடசாலை கட்டமைப்பில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நூல்களாகிய தோழர்களே நேசமிகு நண்பர்கள் என்ற வேலைத்திட்டம் தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. இதன் முதற் கட்டத்திற்கான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு செப்டம்பர் மாதமளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அதிக நூல்களை வாசித்தோருக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.இதன்படி 3000 பேர் பதக்கங்கள் பெறுவதற்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

 
பாடசாலை கட்டமைப்பினை செயற்திறனாக முன்னெடுத்து செல்ல வேண்டுமாயின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் தகவல்கள் புதுப்பிக்கப்பட்டதாக அமைய வேண்டியது அத்தியாவசியமாகும். இதன்படி தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் எதிர்காலத்தை அடையும் இந்த யுகத்தில் மிகவும் இலகுவாக தகவல்களை பெறும் வகையில்  ஒன்லைன் முறைமை கீழ் நாட்டின் கல்வி கட்டமைப்பின் தகவல்களை முகாமைத்துவம் செய்வதனை பலப்படுத்துவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
 
அரச, தனியார் மற்றும் பிரிவெனாக்களில் சேவை செய்யும் ஆசிரியர்களுக்கு செயற்திறன்மிக்க சேவையை வழங்குவதற்கும் திருப்திகரமான சேவையை வளர்ச்சிக்குட்படுத்தவும் விசேட பொறிமுறையை அமுலுக்கு கொண்டு வருவதே இந்த திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.



ஆசிரியர்களின் ஆங்கில மொழி திறமையை on line முறைமையில் இனங்காணும் நோக்கில் பிரித்தானியாவின் NILE (Norwich Institute of Language Education) நிறுவனத்துடன் இணைந்து விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் 9 மாகாணங்களில் இருந்து 500 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.



பாடசாலைகளில் 1 முதல் 11 வகுப்பு வரை கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் கணிதம் விருப்பமான பாடமாக ஆக்குவதற்கும் செயற்திறன் மட்டத்தை அதிகரிக்கவும் கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கல்வி அமைச்சின் கணித பாடத்துறைக்கான கிளை விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

கணித கருத்திட்டத்தை அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புப்படுத்தி மாணவர்கள் இலகுவாக புரிந்துக்கொள்ளும் விதமாக செயற்பாடுகள் ஊடாக  புரிந்துக்கொள்ள வாய்ப்புகள் வழங்குவதே குறித்த வேலைத்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக படைப்பாற்றல், முரண்பாடுகளை தீர்க்கும் திறமை, தொடர்பாடல் திறன், பகுத்தறிவு சிந்தனை போன்ற திறமைகள் வளர்க்கப்படும். இந்த வேலைத்திட்டத்தில் ஆரம்ப கல்வி, இடைநிலை வகுப்புகள் மாணவர்கள் உள்வாங்கப்படும் வகையில் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான கற்றல் வள உபகரணங்கள், செயற்பாட்டு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக 150 பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கணித பாடத்தின் செயற்திறன் நிலையை கட்டியெழுப்புவதற்கு குறுகிய காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக 2015 ஆம் ஆண்டு  சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தி பெற்றோரின் வீதம் 55 ஆக இருந்ததுடன் 2016 இல் 63 வீதமாகவும் 2017 இல் 67 வீதமாகவும் 2018 இல் 68 வீதமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. கணித பாடத்தின் செயற்திறன் நிலையை வளர்க்க இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுகின்றன.

தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு 2015 மற்றும் 2017 ஆண்டுகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர் பயிலுனர்கள் மூனறாண்டு பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் பிரகாரம் 4286 ஆசிரியர் பயிலுனர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது



கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 16 ஆம் திகதி ஹோமாகமவில் அமைந்துள்ள கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் களஞ்சியசாலை கட்டத்தொகுதியில் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் விநியோக நிகழ்வு நடைபெறவுள்ளது.

மேலும் அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்க அரசாங்கம் 4,165 மில்லியன் ரூபாவை இம்முறை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆங்கில மொழியை இலகுவாக கையாளக் கூடிய தொழிலாளர் படையணியை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் வசதிகள் குறைந்த பிரதேச பாடசாலை மாணவர்கள் ஆங்கில மொழியில் கதைக்கும் திறமையை வளர்க்க இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரம் அமெரிக்காவின் அமைதி படையணியின் தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அமெரிக்க தூதுவர் அலெய்னா பீ டெப்லிஸ்ட்  ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (08) கல்வி அமைச்சில் நடைபெற்றது.

அமெரிக்காவின் தன்னார்வ ஆங்கில ஆசிரியர்களின் சேவை 1960 ஆம் ஆண்டு முதல் 90 வரை வழங்கப்பட்டு டெலிக் ஆசிரிய பயிற்சி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு முதல்  அமெரிக்கா தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை மீண்டும் வழங்க விருப்பம் கொண்டுள்ளது.இதன்படி முதலாம் கட்டமாக 30 ஆசிரியர்களுடன் ஆரம்பித்து 150 வரையான ஆசிரியர்களை கொண்ட குழுவின் ஊடாக வசதிகள் குறைந்த பிரதேச மாணவர்களுக்கு சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டமாக ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை தேர்ந்தெடுத்து ஆங்கில மொழி கற்பித்தல் சேவையை அமெரிக்க தன்னார்வ ஆசிரியர்கள் குழாம் வழங்கவுள்ளது. அத்துடன் ஒரு ஆசிரியரின் தன்னார்வ சேவைக்காலம் 2 வருடங்களாகும்.

120 பிரிவெனாக்களில் முன்னெடுக்கப்படும் நிர்மாணப்பணிகளை இவ்வாண்டுக்குள் நிறைவு செய்யுமாறு கல்வி அமைச்சர் அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் ஆலோசனையின் கீழ் பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு சமாந்தரமாக பிரிவெனாக்களில் அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Search